ஒரு நாள் நடந்த கூட்டத்தில் சா'ன் ஆசிரியர் வேய்ஷான் "இன்னும் நூறு வருடத்தில், உங்களுடைய ஆசிரியர் காளை மாடாக இந்த பூமியில் பிறக்கப் போகிறார். அந்தக் காளையின் வலது பக்கத்தில் 'வேய்ஷான்' என்று எழுதி இருக்கும். கற்பனைக்கு அந்த சமயத்தில் யாரவது என்னை 'வேய்ஷான்' என்று அழைத்தால் மாட்டினை பெயர் சொல்லி அழைத்ததாகவே அர்த்தம். யாராவது மாடு என்று அழைத்தால் 'வேய்ஷான்' என்று கூப்பிடுவதாகவே அர்த்தம். இப்பொழுது சொல்லுங்கள் என்னை எப்படி அழைப்பது சரியாக இருக்கும்" என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துக் கேட்டார்.
எங்கும் சத்தமே இல்லாமல் அமைதி நிரம்பியது. யாரும் பதில் கூறவில்லை. யாங் ஷான் என்ற சீடன் ஆசிரியர் முன்பு வந்து மண்டியிட்டு வணங்கினான், ஒரு வார்த்தையும் கூறாமல் திரும்பவும் தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்து விட்டான்.
(எனது கருத்து:
தன்னொளி பெற்றவனுடைய மனதில் கற்பனையில் கூறப்பட்ட மாட்டிற்கும், நிஜமான வேய்ஷானுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தன்னொளி பெற்றவனுக்கு "நான்", "நீ" என்று பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. மனம் புத்த மனமாகிறது. வாழும் நிலம் புத்த நிலமாகிறது. எங்கும் எதிலும் புத்தனையே காண்கிறது.
ஆசிரியர் சீடர்கள் பிரித்துப் பார்க்கிறார்களா என்று சோதனை செய்து பார்க்க விரும்பினார். ஆனால் யாரும் பிரித்துப் பார்க்க வில்லை. யாங் ஷான் ஆசிரியரின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு அவருடைய சிறந்த சொற்பொழிவிற்கு நன்றி கூறி வணங்கி விட்டு தன்னிடத்தில் வந்து அமருகிறான். சில சமயங்களில் வார்த்தைகள் பொருளிழந்து விடுகின்றன. செய்யும் செயலே வார்த்தைகளுக்கும் மேலாக பொருளினை உணர்த்துகிறது. இந்தக் கதையில் தாங்கள் ஆசிரியர் கூறியதை புரிந்து கொண்டோம் என்பதனை நாசுக்காக அவரை வணங்கி சீடன் தெரிவிக்கிறான்).
வியாழன், 22 ஏப்ரல், 2010
தமிழகத்தின் காதல் ரிப்போர்ட்2009

காதல் கொண்டவர்கள் எண்ணிக்கை:22017
காதல் திருமணம் :615
காதல் தோல்வி ஆண்கள்:4992
காதல் தோல்வி பெண்கள் :12
பைத்தியம் பிடித்த ஆண்கள்:117
பைத்தியம் பிடித்த பெண்கள்:0
இறந்த ஆண்கள்:228
இறந்த பெண்கள்:4
குடிபழக்கம் உள்ள ஆண்கள்:13723
(ஒழுங்காதான டா இருந்தேங்க திடிர்னு எங்க இருந்து வந்தது இந்த காதல்)
மத சம்பந்தமாக..

அந்த விமானம் புயலில் சிக்கி,மேலும் கிழும் தவித்துக் கொண்டு இருந்தது.
ஒரு கிழப் பெண்மணி ,மிகவும் பயந்து போய்த் திடிரென, அனைவரும் பிராத்தனை செய்யுங்கள்."என்று கத்தினாள்.
அவளருகில் அமர்ந்திருந்த ஸ்காட்லாந்து மனிதன் ,"எனக்கு பிராத்தனை செய்யத் தெரியாதே! என்றான்.
சரி !மதரீதியாக எதாவது செய்,"என்றாள்.
ஆகவே அவன் எழுந்து அவன் தொப்பியை கவிழ்த்து கையில் பிடித்துக் கொண்டு சுற்றி வந்து பணம் வசூலிக்கத் தொடங்கினான்.
அது ஒன்றுதான் மத சம்பந்தமாக அவனுக்கு தெரிந்தது.பெருமையுடன் வழங்குவது ஜெய்தீப்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)