ஓழுக்கம் அல்லது ஓழுக்கமான பழக்கவழக்கம் என்பது சமுதாயத்தைப் பொறுத்தவரை வெறும் பயன்பாடு மட்டுமே. ஆனால் தனிமனிதனுக்கு அது பயன்பாடல்ல, அது ஓரு ஆனந்தம். ஆதலினால், சமுதாயத்தின் தேவைகளை போலித்தனமான ஓழுக்கத்தால் கூட திருப்திப்படுத்திவிடமுடியும்.
ஆனால் தனிமனிதனைப் பொறுத்தவரை அது போதாது. சமுதாயத்தைப் பொறுத்தவரை நீ மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொண்டால் போதும் ஆனால் உன்னைப் பொறுத்தவரை அது போதாது. நீ கண்டிப்பாக இதைப் பார்க்க இயலும் — நீ உனக்குள்ளே நன்றாக இருக்கிறாயோ இல்லையோ. சமுதாயம் உனது சமூக முகத்தை குறித்தே கவலை கொள்கிறது, உன்னுடைய உள்ளிருப்பை பற்றி அது கவலைப்படுவதில்லை. ஆனால் உனக்கு சமூக முகம் ஆடையை போன்றதே. அது எங்கு முடிகிறதோ அங்கிருந்துதான் நீ தொடங்குகிறாய். சமூக முகம் என்ற இந்த முகமூடியிலிருந்து தனித்தும் அதற்கு பின்னும் உள்ளதே உனது உண்மையான இருப்பு. அங்குதான் ஓழுக்கம் பிறக்கிறது.
பொய்யான ஓழுக்கத்தின் மூலம் உருவான சமுதாயம் நாகரீகம் என அழைக்கப்படுகிறது. வாழ்வின் உண்மையை அடைந்த மனிதர்களை கொண்ட சமுதாயம் பண்பாடானது என அழைக்கப்படுகிறது. இதுதான் நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு. நாகரீகம் என்பது ஓரு பயன்பாடு, பண்பாடு என்பது உள் ஓத்திசைவு மற்றும் ஆனந்தம்.
இன்று நம்மிடம் நாகரீகம் உள்ளது ஆனால் பண்பாடு இல்லை. இருந்தாலும் நாம் எல்லோரும் இணைந்து முயற்சி செய்தால் இந்த பண்பாட்டை உருவாக்க முடியும். நாம் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறையை தூய்மைபடுத்துவதால் நாகரீகம் வருகிறது. பண்பாடு நம்மை தூய்மைபடுத்திகொள்வதன் மூலம் நம்மை புரிந்துகெரள்வதால் வருகிறது. நாகரீகம் என்பது உடல், பண்பாடு என்பது இருப்பு. தன் இருப்பில் ஆழமாக வேரூன்றி இருப்பவர்கள் மட்டுமே ஓரு பண்பாட்டை உருவாக்கமுடியும்.
வெள்ளி, 30 ஏப்ரல், 2010
ஓழுக்கம் என்றால் என்ன ?
மதம் சிதைந்து போனால் அது எப்போதும் ஓழுக்கமாகமாறிவிடுகிறது. ஓழுக்கம் என்பது இறந்து போன மதம். மதம் என்பது உயிரோட்டமுள்ள ஓழுக்கம். அவை சந்திப்பதேயில்லை, அவை சந்திக்க இயலாது. ஏனெனில் வாழ்வும் மரணமும் சந்திப்பதேயில்லை, இருளும் ஓளியும் சந்திப்பதேயில்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவை ஓன்று போலவே தோற்றமளிக்கின்றன. வாழும் மனிதனை போலவே இறந்த பிணமும் காட்சியளிக்கிறது. அதே முகம், அதே கண்கள், அதே மூக்கு, மயிர்கள், உடம்பு எல்லாம் அவன் உயிரோடு இருந்தபோது இருந்ததை போலவே இருக்கின்றன. ஓன்றே ஓன்றுதான் இல்லை, அந்த ஓன்றை பார்க்க இயலாது. உயிரோட்டம் இல்லை, ஆனால் உயிரோட்டத்தை தொடவோ, பார்க்கவோ முடியாது. எனவே இறந்துபோன ஓரு மனிதன், இன்னும் அவன் உயிரோடு இருப்பதை போலவே காட்சியளிக்கிறான். ஓழுக்கத்தை பற்றிய விஷயத்தில் அது இன்னும் சிக்கலானது.
ஓழுக்கம் மதத்தைப் போலவே காட்சியளிக்கிறது, ஆனால் அது அப்படி அல்ல. அது ஓரு பிணம். மதம் இளமையானது, புத்துணர்வு மிக்கது. மதம் மலர்களின் புத்துணர்வையும், காலைப் பனித்துளியின் புத்துணர்வையும் கொண்டது. மதம் ஓரு வசந்தம், நட்சத்திரங்களின் வசந்தம், வாழ்வின் வசந்தம், பிரபஞ்சத்தின் வசந்தம். மதம் உள்ளபோது ஓழுக்கம் இருப்பதில்லை, அவனது இயல்பே ஓழுக்கமாக இருக்கிறது.
ஆனால் அங்கு ஓழுக்கம் என்ற ஓன்று தனியாக இருப்பதில்லை, ஓழுக்கம் என்றால் என்ன என்ற கருத்தும் இருப்பதில்லை. அது அவனது இயல்பாகவே உள்ளது, உன்னுடைய நிழல் உன்னை தொடர்வதை போல அது உன்னை தொடர்கிறது. நீ உன்னுடைய நிழலை சுமக்க வேண்டியதில்லை. நீ உன்னுடைய நிழலைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை. உன்னுடைய நிழல் உன்னை தொடர்கிறதா இல்லையா என நீ திரும்பி திரும்பி பார்க்க வேண்டியதில்லை. அது உன்னை பின்தொடரும்.
அதைப்போலவே, ஓழுக்கம் மதத்தன்மை வாய்ந்த மனிதனை பின்தொடர்கிறது. அவன் அதைப் பொருட்படுத்துவதில்லை, அவன் அதைப் பற்றி நினைப்பதில்லை, அது அவனது இயல்பான குணம். ஆனால் மதம் இறந்தபிறகு, உயிரோட்டம் மறைந்த பிறகு, ஓருவன் ஓழுக்கத்தைப் பற்றி தொடர்ந்து சிந்திக்க தொடங்குகிறான். விழிப்புணர்வு மறைந்துவிட்டது, அது குறித்த சிந்தனை மட்டுமே அவன் ஓதுங்குமிடமாக மீதமுள்ளது.
இரண்டாவதாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஓழுக்கவாதி பல காரணங்களுக்காக எப்போதும் தனது ஓழுக்கத்தை பிறர்மீது திணிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். முதலாவது தனது ஓழுக்கத்தை அவன் தன்மீது அதிகாரம் செலுத்த உபயோகப்படுத்துகிறான். இயல்பாக மற்றவரிடத்திலும் அவன் அதையே செய்கிறான். அவன் தனது ஓழுக்கத்தை மற்றவர்மீது அதிகாரம் செலுத்த பயன்படுத்துகிறான். அவன் ஓழுக்கத்தை தனது சொந்த லாபங்களுக்காக பயன்படுத்த தொடங்குகிறான். இயல்பாக அவன் இந்த தந்திரத்தைக் கற்றுக்கொள்கிறான். அவன் தனது ஓழுக்கத்தை மற்றவர்கள் மீது திணிக்கமுடிந்தால் பிறகு செயல்கள் எளிமையாகிவிடும்.
எடுத்துகாட்டாக, ஓழுக்கவாதி உண்மையை பேசினால், அவனுடைய உண்மை ஆழமானதல்ல, அடி ஆழத்தில் பொய்கள், பொய்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சமுதாயத்திலாவது அவன் உண்மை பேசுவதைப் போல நடிக்கிறான். அவன் மற்றவர்களிடமும் அவனுடைய உண்மையை திணிக்க முயல்வான். அவன் மற்றவர்கள் அனைவரும் உண்மையை பேச வேண்டும் என விரும்புவான். ஏனெனில் அவன் தன்னை யாராவது பொய் சொல்லி, குறுக்கு வழியில்,ஏமாற்றிவிடுவார்களோ என மிகவும் பயந்துகொண்டிருப்பான்......
அவன் நாம் சாதுரியமான வார்த்தைகளால் மக்களை பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவான். ஆனால் மேலோட்டத்தில் அவன் உண்மையை காப்பாற்றுகிறான். அவன் எல்லோரும் உண்மையாக இருக்கவேண்டும் என கத்திக் கொண்டேயிருக்கிறான் அவன் மிகவும் பயந்திருக்கிறான். அவன் மற்றவர்களை ஏமாற்றுவதைப் போல மற்றவர்களும் அவனை ஏமாற்றலாம் என அவனுக்குத் தெரியும்.
ஓழுக்கம் மதத்தைப் போலவே காட்சியளிக்கிறது, ஆனால் அது அப்படி அல்ல. அது ஓரு பிணம். மதம் இளமையானது, புத்துணர்வு மிக்கது. மதம் மலர்களின் புத்துணர்வையும், காலைப் பனித்துளியின் புத்துணர்வையும் கொண்டது. மதம் ஓரு வசந்தம், நட்சத்திரங்களின் வசந்தம், வாழ்வின் வசந்தம், பிரபஞ்சத்தின் வசந்தம். மதம் உள்ளபோது ஓழுக்கம் இருப்பதில்லை, அவனது இயல்பே ஓழுக்கமாக இருக்கிறது.
ஆனால் அங்கு ஓழுக்கம் என்ற ஓன்று தனியாக இருப்பதில்லை, ஓழுக்கம் என்றால் என்ன என்ற கருத்தும் இருப்பதில்லை. அது அவனது இயல்பாகவே உள்ளது, உன்னுடைய நிழல் உன்னை தொடர்வதை போல அது உன்னை தொடர்கிறது. நீ உன்னுடைய நிழலை சுமக்க வேண்டியதில்லை. நீ உன்னுடைய நிழலைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை. உன்னுடைய நிழல் உன்னை தொடர்கிறதா இல்லையா என நீ திரும்பி திரும்பி பார்க்க வேண்டியதில்லை. அது உன்னை பின்தொடரும்.
அதைப்போலவே, ஓழுக்கம் மதத்தன்மை வாய்ந்த மனிதனை பின்தொடர்கிறது. அவன் அதைப் பொருட்படுத்துவதில்லை, அவன் அதைப் பற்றி நினைப்பதில்லை, அது அவனது இயல்பான குணம். ஆனால் மதம் இறந்தபிறகு, உயிரோட்டம் மறைந்த பிறகு, ஓருவன் ஓழுக்கத்தைப் பற்றி தொடர்ந்து சிந்திக்க தொடங்குகிறான். விழிப்புணர்வு மறைந்துவிட்டது, அது குறித்த சிந்தனை மட்டுமே அவன் ஓதுங்குமிடமாக மீதமுள்ளது.
இரண்டாவதாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஓழுக்கவாதி பல காரணங்களுக்காக எப்போதும் தனது ஓழுக்கத்தை பிறர்மீது திணிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். முதலாவது தனது ஓழுக்கத்தை அவன் தன்மீது அதிகாரம் செலுத்த உபயோகப்படுத்துகிறான். இயல்பாக மற்றவரிடத்திலும் அவன் அதையே செய்கிறான். அவன் தனது ஓழுக்கத்தை மற்றவர்மீது அதிகாரம் செலுத்த பயன்படுத்துகிறான். அவன் ஓழுக்கத்தை தனது சொந்த லாபங்களுக்காக பயன்படுத்த தொடங்குகிறான். இயல்பாக அவன் இந்த தந்திரத்தைக் கற்றுக்கொள்கிறான். அவன் தனது ஓழுக்கத்தை மற்றவர்கள் மீது திணிக்கமுடிந்தால் பிறகு செயல்கள் எளிமையாகிவிடும்.
எடுத்துகாட்டாக, ஓழுக்கவாதி உண்மையை பேசினால், அவனுடைய உண்மை ஆழமானதல்ல, அடி ஆழத்தில் பொய்கள், பொய்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சமுதாயத்திலாவது அவன் உண்மை பேசுவதைப் போல நடிக்கிறான். அவன் மற்றவர்களிடமும் அவனுடைய உண்மையை திணிக்க முயல்வான். அவன் மற்றவர்கள் அனைவரும் உண்மையை பேச வேண்டும் என விரும்புவான். ஏனெனில் அவன் தன்னை யாராவது பொய் சொல்லி, குறுக்கு வழியில்,ஏமாற்றிவிடுவார்களோ என மிகவும் பயந்துகொண்டிருப்பான்......
அவன் நாம் சாதுரியமான வார்த்தைகளால் மக்களை பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவான். ஆனால் மேலோட்டத்தில் அவன் உண்மையை காப்பாற்றுகிறான். அவன் எல்லோரும் உண்மையாக இருக்கவேண்டும் என கத்திக் கொண்டேயிருக்கிறான் அவன் மிகவும் பயந்திருக்கிறான். அவன் மற்றவர்களை ஏமாற்றுவதைப் போல மற்றவர்களும் அவனை ஏமாற்றலாம் என அவனுக்குத் தெரியும்.
வியாழன், 29 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
