வெள்ளி, 30 ஏப்ரல், 2010
புரிய வில்லை.
எதை புரிந்தாலும் புரியாவிட்டாலும்.. எந்த நிலையில் இருந்தாலும்.. அந்த நிலையே நீ அடைந்த நிலை.
பல வருடங்கள் பயிற்சியில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் ஆசிரியர் டைனின் காடாகிரி ரோஸியிடம் வந்து "நீங்கள் முன்பெல்லாம் சொற்பொழிவு ஆற்றும் போது ஏதோ புரியும் படி இருக்கும், ஆனால் இப்பொழுது எல்லாம் நீங்கள் பேசுவது என்ன என்றே புரிய வில்லை" என்று கூறினான்.
ஆசிரியர் காடாகிரி அசட்டுத் தனமான முகத்துடன் சிரித்துக் கொண்டே, "கடைசியாக, நீ எதையோ புரிந்து கொள்வது போல் தெரிகிறதே" என்றார்.
எப்படி சொல்லுகிறாய்.
ருடாகிஜி மடத்தில் பயிற்சிக்காக வந்திருந்த அமெரிக்கர்கள் பிளிப் காப்லேவையும், பெர்னார்டு பிளிப்பையும் தனியாக அழைத்து சோயன் நாககாவா ரோஸி பின்வருமாறு கேட்டார்.
"இயேசு சிலுவையில் உயிர் நீக்கும் தறுவாயில் என்ன கூறினார்?"
காப்லே, "என் தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?" என்று இயேசு கூறியதாக பதில் சொன்னார்.
"இல்லை" என்று கத்திய சோயன் ரோஸி, பிளிப்பினை நோக்கி, "இயேசு சிலுவையில் உயிர் நீக்கும் தறுவாயில் என்ன கூறினார்" என்று மறு படியும் கேட்டார்.
"காப்லே கூறியது சரியேன்றே எனக்குப் படுகிறது" என்று கூறிய பிளிப், "அவர் சொன்னார், 'என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?' " என்று பதில் கூறினார்.
"இல்லை" என்று மறுத்து அவர்கள் கூறிய பதிலினை ஏற்றுக் கொள்ள வில்லை சோயன் ரோஸி.
பொருமையை இழந்து "அப்படி என்றால் அவர் என்ன தான் கூறினார்?" என்று இருவரும் கேட்டார்கள்.
சோயன் ரோஸி தன்னுடைய கரங்களை மேலே தூக்கி வானத்தைப் பார்த்து கதறலான வேதனையுற்ற குரலுடன், "என் தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?" என்று அழுது கொண்டே கத்தினார்.
வாழ்க்கையின் முதல் அழகிய புன்னகை.
ஆசிரியர் மொகுஜென் தன்னுடைய வாழ் நாளில் சிரித்ததோ, புன்னகை செய்ததோ கிடையாது. எப்பொழுதும் முகத்தினை கடுமையாக வைத்துக் கொண்டிருப்பார். இறக்கும் தறுவாயில் இருந்த போது தன்னுடைய நம்பிக்கைக் கூறிய சீடர்களை அழைத்து, "நீங்கள் கடந்த பத்து வருடமாக ஸென்னினை என்னிடம் கற்று வருகிறீர்கள். நீங்கள் ஸென்னைப் பற்றி புரிந்து கொண்டதை பற்றி என்னிடம் விளக்கிக் காட்டுங்கள். யார் ஒருவன் மிகத் தெளிவாக விளக்குகிறானோ அவனே எனக்கு பிறகு இந்த மடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும். அவனுக்கே என்னுடைய மேலங்கியும், திருவோட்டையும் தருவேன்" என்று கூறினார்.
யாரும் பதில் கூறாமல், மொகுஜென்னுடைய கடுமையான முகத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வேகு காலமாக ஆசிரியருடன் இருந்த சீடன் என்சோ, ஆசிரியரின் படுக்கையின் அருகே வந்தான். அருகில் இருந்த மருந்துக் கோப்பையை ஆசிரியரை நோக்கி நகர்த்தினான். அதுதான் அவன் ஆசிரியருக்கு அளித்த பதில்.
அதனைப் பார்த்த ஆசிரியரின் முகம் முன்பைவிட கடுமையானது. "இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது" என்று நம்பிக்கைத் தேயந்த குரலில் கேட்டார்.
என்கோ மறுபடியும் படுக்கையின் அருகே சென்று கோப்பையை முன்பிருந்த இடத்திற்கே நகர்த்தினான்.
முகம் மலர்ந்த ஆசிரியர் மொகுஜென் அழகிய புன்னகையுடன். "ஏ பொருக்கி" என்று செல்லமாக திட்டியவர், "என்னுடன் இத்தனை வருடங்களாக இருந்திருந்தாலும் என்னுடைய முழு உடலையும் நீ பார்த்ததில்லை. என்னுடைய மேலங்கியையும், திருவோட்டையும் எடுத்துக் கொள். அது உன்னையேச் சேரும்" என்று கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)