திங்கள், 19 ஏப்ரல், 2010

உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?

சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். ஜென் குருவிடம் அவன், "குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். குரு "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளால் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தான்.

ஜென் ஆசிரியர், "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
கதை - 1 உணர்த்தியது

நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்..

காதலித்துப்பார்....


ஒரு நொடியில் கண்ணீர்
வரவைக்குமா???

ஒரு நொடியில் இருதயம்
நின்று துடிக்குமா???

ஒரு நொடியில் எல்லாம்
இழந்தது போல் தோன்றுமா???

ஒரு நொடியில் மரணித்த
உணர்வு ஏற்படுமா???

ஒரு நொடியில் உலகம்
தலைகீழானதை உணரமுடியுமா???

காதலித்துப்பார்
இதெல்லாம் நடக்கும்....


--------------------
உனக்கு வலிக்கும்போதெல்லாம் பிறருக்கு 
MAHA JAIDEEP
கொடுத்த வலியை உணர்ந்தாயா?