வியாழன், 22 ஏப்ரல், 2010

ஒரு விரல்.

ஊருக்கு ஒதுக்கு புரமாக தனிமைப் படுத்தப் பட்டு இருந்த ஒரு புத்த விஹாரத்தில் சூஷி என்ற துறவி தியானம் புரிந்து வந்தார். ஷிஷி என்ற பிக்ஷுனி (பெண் துறவி) அந்த விஹாரத்திற்கு வந்தாள். சூஷி இருந்த இடத்திற்கு எந்த அனுமதியும் கேட்காமல் தன்னுடைய கையில் தண்டத்துடனும் (கைத்தடி) தலையில் வைக்கோலினால் செய்யப் பட்ட தொப்பியினையும் அணிந்து கொண்டு சென்றாள். தியானத்தில் இருந்த சூஷியைப் பார்த்து "என்னுடைய தலையில் உள்ள தொப்பியை எடுக்க வேண்டுமானால், அதற்கு ஏதாவது ஒரு நல்ல காரணம் கூறு" என்றாள்.

எந்த பதிலும் வரவில்லை. மூன்று முறை அதேக் கேள்வியைத் தொடர்ந்து கேட்டாள். சூஷிக்கு பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் என்ன பதில் சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. எந்த பதிலும் வரததால் கோபமடைந்த ஷிஷி அந்த விஹாரத்திலிருந்து வெளியே புறப்படுவதற்கு ஆயத்தமானாள். சூஷி அவளைப் பார்த்து,"மிகவும் இருட்டாகிவிட்டது, இன்றிரவு நீ இங்கேயே தங்கி விட்டு செல்" என்று கூறினார். "நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறு, நான் இன்றிரவு இங்கேயே கழிக்கிறேன்" என்று பதில் கூறினாள் ஷிஷி. ஆனால் எந்த பதிலும் வரததால் விஹாரத்தை விட்டு புறப்பட்டு சென்று விட்டாள்.

ஆணாக இருந்தும் பிக்ஷுனி கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லையே என்று நொந்து கொண்ட சூஷி, "எனக்கு இன்னும் தகுந்த ஞானமோ தன்னொளியோ கிடைக்க வில்லை" என்று மனதிற்குள் வருந்தினான்.

கொஞ்ச நாட்கள் கழிந்ததும் சா'ன் ஆசிரியர் டி'யான் லூங் அந்த விஹாரத்திற்கு வந்தார். அவரிடம் சூஷி நடந்ததை எல்லாம் கூறி பதிலை எதிர் பார்த்தான். எந்த பதிலும் கூறாத ஆசிரியர் டி'யான் லூங் தன்னுடைய ஒரு விரலைத் தூக்கி மேலே காட்டினார். அந்த ஒரு விரலைப் பார்த்தவுடன் தன்னொளி பெற்றவன், அதிலிருந்து யார் எந்தக் கேள்வியைக் கேட்டாலும், ஒரு விரலைத் தூக்கிக் காட்டுவதையே வழக்கமாக கொண்டிருந்தான்.

பக்கத்து ஊரிலிருந்த சிறுவன் ஒருவனும் சூஷியைப் பற்றி கேள்வி பட்டான். அதிலிருந்து யார் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தானும் ஒரு விரலை உயர்த்தி மேலே காண்பிக்க ஆரம்பித்தான். சூஷியைப் பார்க்க வந்த ஒருவர் அந்தப் பையனைப் பற்றிக் கூறி "உங்களைப் போலவே அந்த சிறுவனும் புத்தத்தன்மையினை அடைந்து விட்டான், எந்தக் கேள்விக்கும் ஒரு விரலை மேலே உயர்த்திக் காட்டியே பதில் கூறுகிறான்" என்று அந்தச் சிறுவனைப் பற்றி புகழ்ந்து கூறினார்.

தன்னுடைய விஹாரத்திற்கு சிறுவனை வரவழைத்த சூஷி, "ஊரில் உள்ள மக்கள் எல்லாரும் நீ புத்தத் தன்மையை அடைந்து விட்டதாக கூறுகிறார்கள், உண்மையா?" என்றுக் கேட்டார்.

"ஆமாம்" என்றான் சிறுவன்.
"அப்படியா, புத்தாவினைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று கேட்டார்.
எப்பொழுதும் போல தன்னுடைய கையின் ஒரு விரலை உயர்த்திச் சிறுவன் காண்பித்தான். கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒரே வெட்டு வெட்டி அவனுடைய விரலினை தரையில் விழச் செய்தார் சூஷி.

அழுதுகொண்டே பையன் வேகமாக அங்கிருந்து ஓட ஆரம்பித்தான். ஆனால் சூஷி அவனைப் பார்த்து கர்ச்சிக்கும் குரலில் கத்தினார். நிற்க வைக்கும் கர்ச்சிக்கும் கத்தலினால் திரும்பி பார்த்த சிறுவனிடம், மறுபடியும் "புத்தாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றார்.

எப்பொழுதும் போல தன்னுடைய ஒரு விரலினை உயர்த்திய சிறுவன் அங்கு தன்னுடைய விரலினைக் காணமல் கண்டவன், உண்மையான தன்னொளியினைப் பெற்றான்.
எனது கருத்து:

ஷிஷி பிக்ஷுனி விஹாரத்திற்கு வந்த போது "ஆண்", "பெண்" என்ற பால் பாகுபாடுடன் பார்க்கின்ற மனம் பக்குவப் படாத நிலையில் இருந்தார் சூஷி. அதனை சா'ன் ஆசிரியர் டி'யான் லூங் ஒரு விரலை உயர்த்திக் காட்டி இந்த வேறுபாட்டினை மனம் தான் உருவாக்கிறது. ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் ஒரு நிலையில் சிந்திப்பதே புத்தத் தன்மை என்று சுற்றிக் காட்டுகிறார். உண்மையான ஞானம் அனுபவத்தினால் தானே கிடைக்கிறது ஷிஷி பிக்ஷுனியின் வரவால் சூஷியின் அறியாமை அகன்று தன்னொளி பெறுகிறார்.

ஆனால் "எலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக" சிறுவன் உண்மையான புத்தத் தன்மை அடையாமல் ஆசிரியரைப் போல் ஒரு விரலினைப் தூக்கிக் காட்டி, பதிலாகக் கூறி தானும் தன்னொளி பெற்றவன் போல் பாசாங்கு செய்கிறான். அந்த பாசாங்கிலிருந்து விடுவித்து அவனுக்கு உண்மையான புத்தத்தன்மையைக் காட்டுவது ஆசிரியர் சூஷிவின் கடைமையாகிறது.

சிறுவனை வரவழைத்து "புத்தா என்றால் என்ன?" என்கிறார். சிறுவன் எப்பொழுதும் போல் ஒரு விரலைத் தூக்கிக் காட்டும் போது அதனை இரண்டு துண்டுகளாக்குகிறார். ஆனால் அதோடு விட்டு விடாமல் அங்கிருந்து தப்பியோடும் சிறுவனிடம் கர்ச்சிக்கும் குரலால் ஒடாமல் தடுத்து நிறுத்தி அவனுடைய மனதினை ஒரு நிலைப் படுத்தி "புத்தா என்றால் என்ன?" என்று மறுபடியும் கேட்கிறார்.

பழக்க தோஷத்தில் ஒரு விரலைத் தூக்கும் அவனுக்கு தன்னுடைய விரல் வெட்டுண்ட இடத்தில் ஒன்றுமில்லாததைக் காண்கிறான். "எல்லாம் ஒன்று" என்ற தத்துவத்திற்காக சொல்லப் பட்டதை முழுமையாக அனுபவப் பூர்வமாக உணர்கிறான் சிறுவன். ஒன்றும் இல்லாத வெற்றிடம் தானே ஸென், மனதில் இருக்கின்ற எண்ணச்சிதறல்களை ஒருமுகப் படுத்துவது தானே ஸென். இதுவரை புத்தனாக நடித்தவன் புத்தத்தன்மையுடன் கூடிய தன்னொளியினை நொடியில் அடைகிறான்.

தன்னொளி பெறுவதற்கு பல வருடங்கள் பிடிக்கும். முழுமையாக மடத்தில் சேர்ந்து தன் உடல், பொருள், ஆவி அனைத்தினையும் அர்பணிக்க வேண்டும். மடத்தில் சேர்ந்து தியானம் மற்றும் பிற பயிற்சிகளின் வழியாக தன்னொளி பெற முயலும் போது ஒருவன் மூளையை உபயோகப் படுத்துகிறான். மூளை வேலை செய்யும் இடத்தில் மனதின் உள்ளொளியை உண்மையாக புரிந்து கொள்வது கடினம். இந்தச் சிறுவன் எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே நொடியினில் அந்தத் தகுதியினை தன்னுடைய ஒரு விரலினை இழந்து பெறுகிறான். அனுபவமே சிறந்த பாடம் என்பதனை இந்தக் கதையின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

எதுவும் புதிதில்லை.

முதன் முறையாக தன்னிடம் வந்த மாணவன் ஷிய்டோவினை சோதித்துப் பார்க்க விரும்பினார் சா'ன் ஆசிரியர் சிங் யூவான். "நீ ஆசிரியர் ஹூய் நெங்கின் சீடனல்லவா? ஆசிரியரிடம் கல்வி கற்பதற்கு முன்பு உன்னிடம் இல்லாத ஒன்றை புதிதாத ஆசிரியர் ஹூய் நெங் சொல்லிக் கொடுத்தாரா?" என்று ஷிய்டோவினைப் பார்த்துக் கேட்டார் சிங் யூவான்.

"ஆசிரியரிடம் நான் கற்றுக் கொள்ளுவதற்கு முன்பும் அதன் பின்பும் என்னிடம் இல்லாத எந்த ஒன்றும் புதிதாக என்னிடம் சேரவில்லை" என்றான் பணிவுடன் மாணவன் ஷிய்டோ.

ஆனால் விடாக்கண்டனான சா'ன் ஆசிரியர் சிங் யூவான், "ஆசிரியருடைய போதனைகளினால் புதிதாக எதுவுமே நீ பெற வில்லை என்றால் எதற்காக இத்தனை வருடங்கள் அவரிடம் பயின்றாய்?" என்று இன்னொரு கேள்வியை அவன் முன் வைத்தார்.

"நான் அவரிடம் படித்ததினாலேயே தான் எனக்கு, 'என்னிடம் கல்வி கற்பதற்கு முன்பும், பின்பும் எதுவும் புதிதாக சேரவில்லை' என்பது தெரிந்தது. அதற்காகத் தான் இத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டேன்" என்றான்.ஓஷோவிடமும் இதுதான் நடக்கும்.

ஜாடிக்குள் வாத்து.

ஒரு சமயம் பெரிய பதவியில் இருந்த அதிகாரி லூ கென், சா'ன் ஆசிரியர் நான் சூவானைச் சந்திப்பதற்காக சென்றான். ஆசிரியரைப் பார்த்ததும் லூ கென், "முன்னொரு காலத்தில் தவத்தில் சிறந்து வாழ்ந்த ஒருவர் வாத்து குஞ்சு ஒன்றினை ஜாடிக்குள் வளர்த்தார். அந்த குஞ்சும் நன்றாக வளர்ந்து பெரிதானது. ஆனால் பெரிதாக வளர்ந்த வாத்தினை அவரால் ஜாடிக்குளிருந்து எப்படி வெளியே எடுப்பது என்று தெரியவில்லை" என்று கூறி நிறுத்திவிட்டு, ஆசிரியரை நோக்கி புன்முறுவலுடன் "ஜாடியினை உடைக்காமலும், வாத்திற்கு காயம் படாமலும் எப்படி வாத்தினை ஜாடிக்குள்ளிருந்து வெளியே வரவழைப்பது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

"ஓ! தலைவரே!" என்று கூறிய ஆசிரியர் நான் சூவான் திடிரென்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டார்.
அதனைப் பார்த்த லூ கென் "இங்கே இருக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே கொஞ்சமும் தாமதிக்காமல் துள்ளி குதித்தார்.
துள்ளிக் குதித்த லூ கென்னை ஆச்சரியத்துடன் பார்த்து "நல்லது, வெளியே எடுத்தாகி விட்டது" என்றார் ஆசிரியர் நான் சூவான்.
ஓஷோவின் கருத்து:
மனது ஒரு சிறந்த சாதனம். அது இருப்பதை இல்லாததாக மாற்றிவிடும், இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கொள்ளும். மனதில் ஏதாவது ஒரு எண்ணம், சிந்தனை எப்பொழுதும் ஓடிக் கொண்டே இருக்கும். நில் என்று சொன்னாலும் நிக்காது. மனதிற்கு எப்பொழுதும் கடந்த காலத்தைப் பற்றி நினைப்பதிலோ, எதிர்காலத்தைப் பற்றி நினைப்பதிலோ மிகுந்த ஈடுபாடு இருக்கும். இப்பொழுது என்ன செய்கிறோமோ அதில் மனதினை இலயித்து திரம்பட செயவதென்பது அரிது. அதற்குதான் முன்னோர்கள் "மனோபலம்" வேண்டும் என்றார்களோ?

பொய்யான நிஜத்தில் நிகழாத ஒரு கற்பனைக் கதையினைக் கூறி வாத்தினை ஜாடியிலிருந்து எப்படி எடுப்பது என்று கேட்கிறான். ஆசிரியர் அவனுக்கு அங்கு ஜாடியும் இல்லை, அதன் மேல் மூடியும் இல்லை, வாத்தும் இல்லை என்பதனை புரிய வைக்க வேண்டும். அதற்காக பெரும் சத்தத்துடன் அழுகிறார். அந்த அழுகையானது லூ கென்னை மறைத்திருந்த மாயத்திரையை விலகச் செய்து, மனம் கற்பித்த பொய்யான மாய எண்ணத்திலிருந்து விடுபட வைக்கிறது. சா'னில் இரண்டறக் கலந்த ஒருவனுக்கு இயற்கையையும், தன்னையும் வேறு வேறாக பார்ப்பதில்லை. இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறான். இயற்கையோடு இரண்டறக் கலக்கிறான்.

ஆசிரியர் அழுத பெரும் சத்தம் மற்ற எல்லா சிந்தனைகளையும் முடக்கிப் போடுகிறது. அதன் பொருளை உணர்ந்தவன், எதனையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்பதனை உணர்ந்த போது, ஜாடிக்குள் வெளியே வந்த வாத்தைப் போல் இருந்தவன் வெளியே வந்து விட்டேன் என்பதனை "இங்கே இருக்கிறேன்!" என்று கூறி ஆசிரியருக்கு உணர்த்துகிறான். அவனுடைய மாயத் திரை விலகியதை அறிந்த ஆசிரியரும் "நல்லது, வெளியே எடுத்தாகி விட்டது" என்று கூறி ஆச்சரியத்துடன் ஆனந்தமாகிறார்.

முரட்டுக்காளை.

ஒரு நாள் நடந்த கூட்டத்தில் சா'ன் ஆசிரியர் வேய்ஷான் "இன்னும் நூறு வருடத்தில், உங்களுடைய ஆசிரியர் காளை மாடாக இந்த பூமியில் பிறக்கப் போகிறார். அந்தக் காளையின் வலது பக்கத்தில் 'வேய்ஷான்' என்று எழுதி இருக்கும். கற்பனைக்கு அந்த சமயத்தில் யாரவது என்னை 'வேய்ஷான்' என்று அழைத்தால் மாட்டினை பெயர் சொல்லி அழைத்ததாகவே அர்த்தம். யாராவது மாடு என்று அழைத்தால் 'வேய்ஷான்' என்று கூப்பிடுவதாகவே அர்த்தம். இப்பொழுது சொல்லுங்கள் என்னை எப்படி அழைப்பது சரியாக இருக்கும்" என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துக் கேட்டார்.

எங்கும் சத்தமே இல்லாமல் அமைதி நிரம்பியது. யாரும் பதில் கூறவில்லை. யாங் ஷான் என்ற சீடன் ஆசிரியர் முன்பு வந்து மண்டியிட்டு வணங்கினான், ஒரு வார்த்தையும் கூறாமல் திரும்பவும் தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்து விட்டான்.
(எனது கருத்து:
தன்னொளி பெற்றவனுடைய மனதில் கற்பனையில் கூறப்பட்ட மாட்டிற்கும், நிஜமான வேய்ஷானுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தன்னொளி பெற்றவனுக்கு "நான்", "நீ" என்று பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. மனம் புத்த மனமாகிறது. வாழும் நிலம் புத்த நிலமாகிறது. எங்கும் எதிலும் புத்தனையே காண்கிறது.

ஆசிரியர் சீடர்கள் பிரித்துப் பார்க்கிறார்களா என்று சோதனை செய்து பார்க்க விரும்பினார். ஆனால் யாரும் பிரித்துப் பார்க்க வில்லை. யாங் ஷான் ஆசிரியரின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு அவருடைய சிறந்த சொற்பொழிவிற்கு நன்றி கூறி வணங்கி விட்டு தன்னிடத்தில் வந்து அமருகிறான். சில சமயங்களில் வார்த்தைகள் பொருளிழந்து விடுகின்றன. செய்யும் செயலே வார்த்தைகளுக்கும் மேலாக பொருளினை உணர்த்துகிறது. இந்தக் கதையில் தாங்கள் ஆசிரியர் கூறியதை புரிந்து கொண்டோம் என்பதனை நாசுக்காக அவரை வணங்கி சீடன் தெரிவிக்கிறான்).

தமிழகத்தின் காதல் ரிப்போர்ட்2009


காதல் கொண்டவர்கள் எண்ணிக்கை:22017
காதல் திருமணம் :615
காதல் தோல்வி ஆண்கள்:4992
காதல் தோல்வி பெண்கள் :12
பைத்தியம் பிடித்த ஆண்கள்:117
பைத்தியம் பிடித்த பெண்கள்:0
இறந்த ஆண்கள்:228
இறந்த பெண்கள்:4
குடிபழக்கம் உள்ள ஆண்கள்:13723
(ஒழுங்காதான டா இருந்தேங்க திடிர்னு எங்க இருந்து வந்தது இந்த காதல்)


மத சம்பந்தமாக..


அந்த விமானம் புயலில் சிக்கி,மேலும் கிழும் தவித்துக் கொண்டு இருந்தது.
ஒரு கிழப் பெண்மணி ,மிகவும் பயந்து போய்த் திடிரென, அனைவரும் பிராத்தனை செய்யுங்கள்."என்று கத்தினாள்.
அவளருகில் அமர்ந்திருந்த ஸ்காட்லாந்து மனிதன் ,"எனக்கு பிராத்தனை செய்யத் தெரியாதே! என்றான்.
சரி !மதரீதியாக எதாவது செய்,"என்றாள்.
ஆகவே அவன் எழுந்து அவன் தொப்பியை கவிழ்த்து கையில் பிடித்துக் கொண்டு சுற்றி வந்து பணம் வசூலிக்கத் தொடங்கினான்.
அது ஒன்றுதான் மத சம்பந்தமாக அவனுக்கு தெரிந்தது.பெருமையுடன் வழங்குவது ஜெய்தீப்.