ஒரு ஸென் ஆசிரியரிடம் இருபது புத்த பிக்ஷுக்களும், ஒரே ஒரு புத்த பிக்ஷுனியும் தியானத்தினை பயிற்சி செய்து வந்தனர்.
ஈஸுனின் தலை மொட்டை அடிக்கப் பட்டிருந்தாலும், காவி உடையினை அணிந்திருந்தாலும், மிகவும் அழகாகவே பார்ப்பவர்களுக்குத் தெரிந்தாள். இயற்கையிலேயே அழகான அவள், துறவியாக இருந்த போதும் மற்றவர்களை சுண்டி இழுக்கும் வசிகரத் தோற்றத்தினைப் பெற்றிருந்தாள்.
எல்லாத் துறவிகளும் மனதிற்குள் அவளைக் காதலிக்க ஆரம்பித்தனர். அதற்கும் மேலே போய் ஒரு துறவி அவளுக்கு காதல் கடிதம் எழுதி தனிமையில் சந்திக்க வேண்டும் என்று அனுமதியும் கேட்டான். ஈஸுன் அவனுக்கு பதில் எதுவும் எழுத வில்லை. தகுந்த நேரத்திற்காக காத்திருந்தாள்.
மறுநாள் ஆசிரியர் பயிற்சியினை ஆரம்பித்து உரையாற்றிக் கொண்டிருந்தார். உரை முடிந்ததும், இது தான் சமயம் எனக் காத்திருந்த ஈஸுன் வெடுக்கென எழுந்து , காதல் கடிதம் எழுதியவனைப் பார்த்து, "நீ உண்மையாகவே என்னை மிகவும் விரும்பிக் காதலிக்கிறாய் என்றால், அருகில் வா, வந்து இப்பொழுது எல்லார் முன்னிலையிலும் என்னை கட்டி அனைத்துக் கொள்" என்றாள். அவ்வளவுதான் அங்கிருந்தவர்கள் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.
அன்றிலிருந்து ஒருவரும் அவள் நின்றிருந்த பக்கம் கூட தலை சாய்த்துப் பார்க்க வில்லை. தன்னுடைய பிக்ஷுனி பயிற்சியை சிறப்பாக முடித்தாள். தன்னொளி பெற்று பிறர் பெறவும் உதவி புரிந்தாள்.
வெள்ளி, 30 ஏப்ரல், 2010
பிக்ஷுனி ரியோனென் வாழ்க்கை
ரியோனென் 1797'ல் பிறந்தவர். புகழ் பெற்ற சமுராய் ஸிங்கனின் பேத்தி. இளம் வயதிலேயே அருமையான கவிதைகள் எழுதுவதில் வள்ளவர். தன்னுடைய பேரழகு மற்றும் கவிதைத் திறமையால் ஜப்பான் அரசியின் உதவிப் பணிப் பெண்ணாக வேலை செய்யும் அரும் பாக்கியம் கிடைத்தது. அவளுடைய திறமையால் பதினேழு வயதிலேயே நல்ல பெயரும் புகழும் சம்பாதித்து இருந்தாள்.
அரசியின் திடிர் மறைவால் ரியோனின் வாழ்க்கை மாற்றம் அடைந்தது. உலக வாழ்க்கையின் நிலை இல்லாத தன்மை அருகில் உள்ள உற்ற நண்பர்களையோ, பாசமான உறவினர்களையோ இழக்கும் போது தான் புலப்படும். ரியோனின் மன நிலை உலகத்தில் உள்ள பந்த பாசங்கள், பிறப்பு இறப்பு என்ற மாய சக்கரத்தின் சுழலில் தான் ஒரு சிறு துறும்பு எனத் தெள்ளத் தெளிவாக அறிவதற்கு அரசியின் மரணம் காரணமாக அமைந்தது. அப்பொழுது தான் ஸென்னில் சேர்ந்து துறவறத்தை மேற்கொள்ள முடிவெடுத்தாள்.
அது சாதரணமான முடிவல்ல, அழுத்தமான உறுதியான இறுதியான முடிவு. ஆனால் ஒரு அழகான இளம்பெண் சன்னியாசினியாக மாறுவதற்கு மற்றவர்கள் சம்மதிக்க வேண்டுமே.
அவளுடைய உறவினர்கள் வற்புறுத்தலால் திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் மூன்று குழந்தைகள் பெற்றதும் சன்னியாசினி ஆக மாறுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவாதத்தினை பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்டாள். 25 வயதில் தன்னுடைய கோரிக்கை நிறைவேறியதும் அவளால் ஒரு நிமிடம் கூட காத்திருக்க முடிய வில்லை. உறவினர், கணவர், குழந்தைகள் அனைவரும் தடுத்த போதும் பந்தங்களிலிருந்து விடுபட்டு, மொட்டை அடித்துக் கொண்டு ரியோன் என்ற புதுப் பெயரினைச் சூட்டிக் கொண்டாள்.
தன்னுடைய புனித பயணத்தை ஆரம்பித்தவள் அங்கிருந்து கிளம்பி ஈடோவில் இருந்த தேட்சுகியுவிடம் சென்று அவருடைய பெண் சீடராக சேர்வதற்கு அனுமதி கேட்டாள். ஒரு கணம் கூட சிந்திக்காமல் அவளுடைய பேரழகைப் பார்த்து அனுமதி தர மறுத்து விட்டார்.
ரியோன் மற்றொரு ஆசிரியர் காகுவோவிடம் சென்று அனுமதி கேட்டாள். அவரும் அவளுடைய அழகு துன்பத்தையும், பிரச்சனைகளையும் தோற்றுவிக்கும் என்று கூறி நிராகரித்து விட்டார்.
அதைக் கேட்ட ரியோன், அங்கிருந்த தகிக்கும் இரும்பினை எடுத்து தன்னுடைய முகத்தினில் தேய்த்துக் கொண்டாள். அன்றிலிருந்து அவளுடைய புற அழகு என்றும் திரும்பிக் கிடைக்காத வகையில் சிதைந்து விட்டது. காகுவோ ரியோனெனை மாணவியாக சேர்த்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்ததின் நினைவாக, ரியோன் ஒரு சிறிய கண்ணாடியின் பின்புறத்தில் கவிதை ஒன்றினை எழுதினாள்.
பேரரசிக்கு பணிபுரிந்து நறுமணத்தை எரித்தேன் - என்னுடைய
பேரழகு உடைகளுக்கு வாசனை திரவியத்தையும் தெளித்தேன்
பரதேசியாய் பற்றற்று வீதியிலே அலைந்தேன் - பற்றற்ற
பராரியாய் ஸென்னில் சேர்வதற்கு முகத்தினையும் எரித்தேன்
அதன் பின்பு தன்னொளி பெற்று சிறந்த புத்தத் துறவியாகத் திகழ்ந்தாள்.
ரியோனென் அறுபத்து ஆறு வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து நிர்வாணம் அடையும் தருவாயில் இந்தக் கவிதையினை விட்டு விட்டு சென்றார்.
இளவேனில் மாறுவதை இந்தக் கண்களும்
அறுபத்து ஆறு முறை பார்த்தன - அந்த
நிலவோளியின் பேரழகை கேட்காதே
நினைவின்றி பல முறை சொன்னேன் - இந்த
பைந்தென்றல் பாரினிலே வீசாத போதும்
பைன், சிடாரின் பேச்சினையேக் கேள்.
அரசியின் திடிர் மறைவால் ரியோனின் வாழ்க்கை மாற்றம் அடைந்தது. உலக வாழ்க்கையின் நிலை இல்லாத தன்மை அருகில் உள்ள உற்ற நண்பர்களையோ, பாசமான உறவினர்களையோ இழக்கும் போது தான் புலப்படும். ரியோனின் மன நிலை உலகத்தில் உள்ள பந்த பாசங்கள், பிறப்பு இறப்பு என்ற மாய சக்கரத்தின் சுழலில் தான் ஒரு சிறு துறும்பு எனத் தெள்ளத் தெளிவாக அறிவதற்கு அரசியின் மரணம் காரணமாக அமைந்தது. அப்பொழுது தான் ஸென்னில் சேர்ந்து துறவறத்தை மேற்கொள்ள முடிவெடுத்தாள்.
அது சாதரணமான முடிவல்ல, அழுத்தமான உறுதியான இறுதியான முடிவு. ஆனால் ஒரு அழகான இளம்பெண் சன்னியாசினியாக மாறுவதற்கு மற்றவர்கள் சம்மதிக்க வேண்டுமே.
அவளுடைய உறவினர்கள் வற்புறுத்தலால் திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் மூன்று குழந்தைகள் பெற்றதும் சன்னியாசினி ஆக மாறுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவாதத்தினை பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்டாள். 25 வயதில் தன்னுடைய கோரிக்கை நிறைவேறியதும் அவளால் ஒரு நிமிடம் கூட காத்திருக்க முடிய வில்லை. உறவினர், கணவர், குழந்தைகள் அனைவரும் தடுத்த போதும் பந்தங்களிலிருந்து விடுபட்டு, மொட்டை அடித்துக் கொண்டு ரியோன் என்ற புதுப் பெயரினைச் சூட்டிக் கொண்டாள்.
தன்னுடைய புனித பயணத்தை ஆரம்பித்தவள் அங்கிருந்து கிளம்பி ஈடோவில் இருந்த தேட்சுகியுவிடம் சென்று அவருடைய பெண் சீடராக சேர்வதற்கு அனுமதி கேட்டாள். ஒரு கணம் கூட சிந்திக்காமல் அவளுடைய பேரழகைப் பார்த்து அனுமதி தர மறுத்து விட்டார்.
ரியோன் மற்றொரு ஆசிரியர் காகுவோவிடம் சென்று அனுமதி கேட்டாள். அவரும் அவளுடைய அழகு துன்பத்தையும், பிரச்சனைகளையும் தோற்றுவிக்கும் என்று கூறி நிராகரித்து விட்டார்.
அதைக் கேட்ட ரியோன், அங்கிருந்த தகிக்கும் இரும்பினை எடுத்து தன்னுடைய முகத்தினில் தேய்த்துக் கொண்டாள். அன்றிலிருந்து அவளுடைய புற அழகு என்றும் திரும்பிக் கிடைக்காத வகையில் சிதைந்து விட்டது. காகுவோ ரியோனெனை மாணவியாக சேர்த்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்ததின் நினைவாக, ரியோன் ஒரு சிறிய கண்ணாடியின் பின்புறத்தில் கவிதை ஒன்றினை எழுதினாள்.
பேரரசிக்கு பணிபுரிந்து நறுமணத்தை எரித்தேன் - என்னுடைய
பேரழகு உடைகளுக்கு வாசனை திரவியத்தையும் தெளித்தேன்
பரதேசியாய் பற்றற்று வீதியிலே அலைந்தேன் - பற்றற்ற
பராரியாய் ஸென்னில் சேர்வதற்கு முகத்தினையும் எரித்தேன்
அதன் பின்பு தன்னொளி பெற்று சிறந்த புத்தத் துறவியாகத் திகழ்ந்தாள்.
ரியோனென் அறுபத்து ஆறு வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து நிர்வாணம் அடையும் தருவாயில் இந்தக் கவிதையினை விட்டு விட்டு சென்றார்.
இளவேனில் மாறுவதை இந்தக் கண்களும்
அறுபத்து ஆறு முறை பார்த்தன - அந்த
நிலவோளியின் பேரழகை கேட்காதே
நினைவின்றி பல முறை சொன்னேன் - இந்த
பைந்தென்றல் பாரினிலே வீசாத போதும்
பைன், சிடாரின் பேச்சினையேக் கேள்.
காமத்தைப் பொறுத்தவரை ஓழுக்கத்தின் எதிர்காலம் என்ன?
காமத்தைப் பொறுத்தவரை எந்த ஓழுக்கத்திற்கும் எதிர்காலம் இல்லை.உண்மையில் ஓழுக்கத்தையும் காமத்தையும் இணைத்த காரணத்தால் ஓழுக்கத்தின் கடந்த காலம் முழுவதும் விஷமாகிவிட்டது. ஓழுக்கம் அளவுக்கு அதிகமாக காமத்தை சார்ந்ததாகிவிட்டது. அதனால் அது காமத்தைத்தவிர முக்கியமான மற்ற தனது பரிமாணங்களை எல்லாம் இழந்துவிட்டது. ஓழுக்க சிந்தனைக்கு காமம் பெரிய பொருட்டாக இருக்ககூடாது.
உண்மை, நேர்மை, சுயப்பெரறுப்புணர்வு, முழுமை, இவைகளைத்தான் ஓழுக்கம் பொருட்படுத்தவேண்டும்.விழிப்புணர்வு, தியானம், தன்ணுணர்வு, அன்பு இவைகளைத்தான் ஓழுக்கம் பொருட்படுத்தவேண்டும்.
ஆனால் கடந்த காலத்தில் காமமும் ஓழுக்கமும் கிட்டதட்ட ஓரே பொருள் தருவதாக மாறிவிட்டன. காமம் அதிக சக்தியுள்ளதாகவும், அடக்கமுடியாததாகவும் மாறிவிட்டது. எனவே யாரையாவது ஓழுக்கமற்றவன் என நீ கூறினால் அவனுடைய காம வாழ்க்கையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்றே நீ குறிப்பிடுகிறாய். நீ மிக ஓழுக்கமானவன் என யாரைப் பற்றியாவது கூறினால், அவன் வாழும் சமூகத்தில் காமத்தைக் குறித்துப் போடப்பட்டுள்ள சட்டதிட்டங்களின்படி நடந்துகொள்கிறான் என்பதையே நீ குறிப்பிடுகிறாய். ஓழுக்கம் ஓற்றைப் பரிமாணம் கொண்டதாகிவிட்டது. அது நல்லதல்ல, அந்த ஓழுக்கத்திற்கு எதிர்காலம் இல்லை, அது இறந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அது இறந்துவிட்டது. நீ ஓரு பிணத்தை சுமந்துகொண்டிருக்கிறாய்.
கடந்த காலத்தில் இருந்ததைப்போல இறுக்கமான விஷயமாக இல்லாமல் காமம் மேலும் விளையாட்டுத்தன்மை கொண்ட விஷயமாக மாறவேண்டும். அது ஓரு விளையாட்டை விளையாடுவதைப் போல விளையாட்டாக இருக்கவேண்டும். இரண்டு மனிதர்கள் ஓருவர் இன்னொருவரின் உடல் சக்தியோடு விளையாடுகிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்வாக இருந்தால், யாரும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அவர்கள் ஓருவர் மற்றொருவரின் சக்தியில் ஆனந்தம் கொள்கிறார்கள். இரு சக்திகள் இணைந்து ஆடும் ஓரு நடனம் அது. சமூகத்தைப் பொறுத்தவரை அது ஓரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. ஓருவர் மற்றொருவரின் வாழ்வில் குறுக்கிட்டால், ஓருவன் தன்னை மற்றவர் வாழ்வில் கட்டாயபடுத்தி திணித்தால், மற்றவரின் வாழ்வை கெடுத்தால் அப்போது மட்டுமே சமுதாயம் உள்ளே வரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையே இல்லை. அது ஓரு பொருட்டாக இருக்ககூடாது.
எதிர்காலம் காமத்தை குறித்து ஓரு முற்றிலும் வேறுபட்ட பார்வையை கொண்டிருக்கும். அது அதிக விளையாட்டாகவும், அதிக மகிழ்ச்சியுடனும், அதிக நட்போடும் கடந்த காலத்தைப் போல் இறுக்கமான விஷயமாக இல்லாமல் விளையாட்டாகவும் இருக்கும். அது மக்களின் வாழ்வை அழித்துள்ளது. தேவையில்லாமல் அவர்களை அதிக சுமை கொண்டவர்களாக ஆக்கியுள்ளது. அது காரணமேயில்லாமல் அளவுக்கதிகமான பொறாமையையும், பிடிப்பையும், ஆளுமையையும், நச்சரித்தலையும், சண்டையிடுதலையும், குறை கூறுதலையும், உருவாக்கியுள்ளது.
காமம் உடலைச் சார்ந்த ஓரு சாதாரண விஷயம், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்ககூடாது. அதன் ஓரே முக்கியத்துவம் அந்த சக்தியினை உயர்ந்த தளங்களுக்கு மாற்றமுடியும் என்பதே. அது மேலும் மேலும் ஆன்மீகமாக மாறமுடியும். அதை மேலும் மேலும் ஆன்மீகமாக மாற்றும் வழி அதன் இறுக்கத்தை குறைத்து தளர்த்துவதே.
டாக்டர் பைபர்க்கு வந்திருக்கும் நோயாளியுடன் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த பெண்ணை அவர் எல்லா பரிசோதனையும் செய்துவிட்டார் ஆனால் அவரது பரிசோதனையின் முடிவுகள் ஓரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தன. முடிவில் அவர் “ பிரச்சனை என்ன என எனக்கு தெளிவாக தெரியவில்லை” என ஓப்புகொண்டார்.
“உனக்கு சளி பிடித்திருக்கிறது அல்லது நீ கர்ப்பமாக இருக்கிறாய்” என அவர் கூறினார்.
அதற்கு அவள், “நான் கர்ப்பமாகத்தான் இருக்கவேண்டும், எனக்கு சளியை கொடுத்திருக்ககூடிய அளவு நெருக்கமாக யாரையும் எனக்கு தெரியாது” என கூறினாள்.
இதுதான் எதிர்காலம்.
உண்மை, நேர்மை, சுயப்பெரறுப்புணர்வு, முழுமை, இவைகளைத்தான் ஓழுக்கம் பொருட்படுத்தவேண்டும்.விழிப்புணர்வு, தியானம், தன்ணுணர்வு, அன்பு இவைகளைத்தான் ஓழுக்கம் பொருட்படுத்தவேண்டும்.
ஆனால் கடந்த காலத்தில் காமமும் ஓழுக்கமும் கிட்டதட்ட ஓரே பொருள் தருவதாக மாறிவிட்டன. காமம் அதிக சக்தியுள்ளதாகவும், அடக்கமுடியாததாகவும் மாறிவிட்டது. எனவே யாரையாவது ஓழுக்கமற்றவன் என நீ கூறினால் அவனுடைய காம வாழ்க்கையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்றே நீ குறிப்பிடுகிறாய். நீ மிக ஓழுக்கமானவன் என யாரைப் பற்றியாவது கூறினால், அவன் வாழும் சமூகத்தில் காமத்தைக் குறித்துப் போடப்பட்டுள்ள சட்டதிட்டங்களின்படி நடந்துகொள்கிறான் என்பதையே நீ குறிப்பிடுகிறாய். ஓழுக்கம் ஓற்றைப் பரிமாணம் கொண்டதாகிவிட்டது. அது நல்லதல்ல, அந்த ஓழுக்கத்திற்கு எதிர்காலம் இல்லை, அது இறந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அது இறந்துவிட்டது. நீ ஓரு பிணத்தை சுமந்துகொண்டிருக்கிறாய்.
கடந்த காலத்தில் இருந்ததைப்போல இறுக்கமான விஷயமாக இல்லாமல் காமம் மேலும் விளையாட்டுத்தன்மை கொண்ட விஷயமாக மாறவேண்டும். அது ஓரு விளையாட்டை விளையாடுவதைப் போல விளையாட்டாக இருக்கவேண்டும். இரண்டு மனிதர்கள் ஓருவர் இன்னொருவரின் உடல் சக்தியோடு விளையாடுகிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்வாக இருந்தால், யாரும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அவர்கள் ஓருவர் மற்றொருவரின் சக்தியில் ஆனந்தம் கொள்கிறார்கள். இரு சக்திகள் இணைந்து ஆடும் ஓரு நடனம் அது. சமூகத்தைப் பொறுத்தவரை அது ஓரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. ஓருவர் மற்றொருவரின் வாழ்வில் குறுக்கிட்டால், ஓருவன் தன்னை மற்றவர் வாழ்வில் கட்டாயபடுத்தி திணித்தால், மற்றவரின் வாழ்வை கெடுத்தால் அப்போது மட்டுமே சமுதாயம் உள்ளே வரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையே இல்லை. அது ஓரு பொருட்டாக இருக்ககூடாது.
எதிர்காலம் காமத்தை குறித்து ஓரு முற்றிலும் வேறுபட்ட பார்வையை கொண்டிருக்கும். அது அதிக விளையாட்டாகவும், அதிக மகிழ்ச்சியுடனும், அதிக நட்போடும் கடந்த காலத்தைப் போல் இறுக்கமான விஷயமாக இல்லாமல் விளையாட்டாகவும் இருக்கும். அது மக்களின் வாழ்வை அழித்துள்ளது. தேவையில்லாமல் அவர்களை அதிக சுமை கொண்டவர்களாக ஆக்கியுள்ளது. அது காரணமேயில்லாமல் அளவுக்கதிகமான பொறாமையையும், பிடிப்பையும், ஆளுமையையும், நச்சரித்தலையும், சண்டையிடுதலையும், குறை கூறுதலையும், உருவாக்கியுள்ளது.
காமம் உடலைச் சார்ந்த ஓரு சாதாரண விஷயம், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்ககூடாது. அதன் ஓரே முக்கியத்துவம் அந்த சக்தியினை உயர்ந்த தளங்களுக்கு மாற்றமுடியும் என்பதே. அது மேலும் மேலும் ஆன்மீகமாக மாறமுடியும். அதை மேலும் மேலும் ஆன்மீகமாக மாற்றும் வழி அதன் இறுக்கத்தை குறைத்து தளர்த்துவதே.
டாக்டர் பைபர்க்கு வந்திருக்கும் நோயாளியுடன் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த பெண்ணை அவர் எல்லா பரிசோதனையும் செய்துவிட்டார் ஆனால் அவரது பரிசோதனையின் முடிவுகள் ஓரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தன. முடிவில் அவர் “ பிரச்சனை என்ன என எனக்கு தெளிவாக தெரியவில்லை” என ஓப்புகொண்டார்.
“உனக்கு சளி பிடித்திருக்கிறது அல்லது நீ கர்ப்பமாக இருக்கிறாய்” என அவர் கூறினார்.
அதற்கு அவள், “நான் கர்ப்பமாகத்தான் இருக்கவேண்டும், எனக்கு சளியை கொடுத்திருக்ககூடிய அளவு நெருக்கமாக யாரையும் எனக்கு தெரியாது” என கூறினாள்.
இதுதான் எதிர்காலம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


