வெள்ளி, 30 ஏப்ரல், 2010

கரிய மூக்கு புத்தர்.

ஒரு பெண் புத்தத் துறவி தன்னொளி பெறுவதற்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். அவள் தங்கத்தால் வெகு அழகாக புத்தச் சிலை ஒன்றினைச் செய்தாள். எங்கு சென்றாலும் அந்தச் சிலையைக் கூடவே எடுத்துச் செல்வாள்.

நாட்கள் கடந்தன. அப்படியே நடந்து கொண்டிருந்தவள், அமைதியான ஆனால் இயற்கை அழகுடன் இருந்த ஒரு கிராமத்திற்கு வந்தாள். அங்கு இருந்த சிறிய புத்தக் கோயிலை மிகவும் பிடித்து விட்டது. அங்கேயே வசிப்பது என முடிவெடுத்தாள். அந்தச் சிறிய கோயிலில் பல புத்தர் சிலைகள் இருந்தன. (புத்த விஹாரங்களில், பிக்ஷுக்கள் வசிப்பது இயல்பு. சில இந்துக் கோயில்களில் பூஜை செய்யும் சுவாமிகளுக்கும் மடப் பள்ளி என்ற பெயரில் ஒரிடம், கோயிலிற்கு மிக அருகாமையில் ஒதுக்கி கொடுத்து இருப்பார்கள். புத்த விஹாரங்களிலும் இது போன்று அனுமதிக்கப் பட்டது.)

தன்னுடைய தங்கச்சிலைக்கு நறுமணப் பொருட்களை (சாம்பிராணி, ஊதுவத்தி) எற்றி வைக்க ஆசைப் பட்டாள். ஆனால் அந்த சின்னக் கோயிலில் இருந்த மற்ற புத்த விக்கிரங்களுக்கு தன்னுடைய நறுமணப் பொருட்கள் செல்லக் கூடாது என முடிவெடுத்தவள், அதற்காக ஒரு கூம்பு வடிவினால் ஆன புனல் ஒன்றினைத் தயாரித்தாள். சாம்பிராணி ஏற்றியதும், அது அவளுடைய புத்த விக்கிரத்திற்கு மட்டுமே போகும்படி செய்தாள். சாம்பிரானியும் புத்தரின் முகத்திற்கு அருகில் மட்டுமே சென்றது. ஆனால் கொஞ்ச நாட்களில் தங்க புத்தரின் மூக்கு கறுத்துப் போய் மிகவும் அசிங்கமாகிவிட்டது.

அன்றிலிருந்து "கருத்த மூக்கு புத்தா பிக்ஷுனி" என்றே எல்லாரும் அவளை அழைக்க ஆரம்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக