செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மாயை எது? நிஜம் எது?


ஒரு திறமை மிக்க ஜப்பானிய போர் வீரன் பகைவர்களால் பிடிக்கப் பட்டு சிறையில் தள்ளப் பட்டான்.
அன்று இரவு முழுவதும் தூக்கம் வரமால் நாளையைப் பற்றி கவலைப் பட்டான்,
காலையில் அவனை கேள்வி கேட்டு துளைக்கப் போகிறார்கள்,
பதில் சொல்லாவிட்டால் சித்தரவதை செய்யப் போகிறார்கள்,
முடிவில் கொன்றாலும் கொன்று விடுவார்கள்.
இப்படியாக பல சிந்தனைகளில் தூக்கம் வராமல் புரண்ட அவனுக்கு தன்னுடைய ஸென் ஆசிரியர் கூறிய "நாளை என்பது இல்லாத மாயை, இன்று மட்டுமே தெரிந்த நிஜம்" என்பது ஞாபகம் வந்தது.
அந்த நினைவுகளுடனே எந்தக் கவலையும் இல்லாமல் அமைதியாக உறங்கிப் போனான் அந்த போர் வீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக