செவ்வாய், 20 ஏப்ரல், 2010

துறவியால் எந்த பயனும் இல்லை..

ஸென் துறவி ஜென்ஷா தனது சீடர்களிடம் "எல்லா துறவிகளும் மற்ற மனிதர்களை துன்பங்களிலிருந்து காப்பது பற்றியே சொல்கிறார்கள்." என்று கூறி நிறுத்தி, பின்பு தனது சீடர்களை நோக்கி, " நீங்கள் குருடன், செவிடன் மற்றும் ஊமையான ஒருவனை சந்திக்கிறிர்கள் என்று வைத்துக் கொள்வோம், அவனால் உங்களுடைய சைகைகளை பார்க்கவோ, போதனைகளை கேட்கவோ, சந்தேகத்தை திருப்பி கேள்வி கேட்டு புரிந்து கொள்ளவோ முடியாது, இப்படியாக அவனைக் காப்பாற்ற முடியாத நிலையிலேயே நீங்கள் இருப்பிர்கள். அப்படிப் பட்டவனிடம் துறவியான நம்மால் என்ன செய்ய முடியும்". என்றார்.

ஒரு சீடனால் ஜென்ஷாவின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாமல் ஏதோ நெருடலாக உணர்ந்தான். உன்மான் ஜென்ஷாவைப் போல செப்போவின் சீடர். எனவே உன்மானைப் பார்த்து இது பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று சென்றான்.

உன்மான் மரியாதையுடன் "தலைவணங்கு" என்று சீடனைப் பார்த்துக் கூறினார். அதைக் கேட்டு வியந்த சீடன் அமைதியாக தலைவணங்கி தான் வந்த நோக்கத்தின் காரணத்தை சொல்லலாம் என்று நினைத்தான். அப்போது உன்மான் அவருடைய கையில் இருந்த கோலை அவனை நோக்கி போட்டார். அதைப் பார்த்து மிரண்ட சீடன் கொஞ்சம் விலகி கோல் தன்மேல் படாமல் பார்த்துக் கொண்டான்.

"நல்லது, நீ குருடன் இல்லை, இங்கு வா" என்று உன்மான் கூப்பிட்டார்
சீடன் குரு சொன்னது போலவே நடந்தான்.
நல்லது, நீ செவிடனும் இல்லை, உன்னால் புரிந்து கொள்ள முடியுமா?" என்றார் உன்மான்
"எதை புரிந்து கொள்வது? சாமி" என்றான்.
"நீ ஊமையும் அல்ல" இதைக் கேட்ட சீடனுக்கு திடிரென்று ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தது போல உணர்ந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக