செவ்வாய், 20 ஏப்ரல், 2010

சீடனான திருடன் .

ஒரு மாலைப் பொழுதில் ஷிசிரு கோஆன் சூத்திரங்களை பாராயணம் செய்து கொண்டிருந்த பொழுது திருடன் ஒருவன் தீட்டிய வீச்சு அறுவாளுடன் வந்து அவரை பார்த்து "பணம் கொடு இல்லையேல் நீ பிணம்" என்று மிரட்டினான்.

ஷிசிரு கொஞ்சமும் பயம் இல்லாமல் "என்னை தொந்தரவு செய்யாதே!! அந்த பெட்டியின் உள்ளே பணம் உள்ளது" என்று அமைதியாக சொல்லி விட்டு தனது பாரயணத்தினைத் தொடர்ந்தார்.

கொஞ்சம் நேரம் கழித்து "எல்லா பணத்தினையும் எடுக்காதே!! நாளை வரி கட்டுவதற்கு கொஞ்சம் பணம் தேவை" என்று கூறினார்.

திருடன் கொஞ்சம் வைத்து விட்டு மீதி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். அப்பொழுது ஷிசிரு "நன்றி கூறிவிட்டு அன்பளிப்பை எடுத்துச் செல்!!" என்று கூறினார். திருடனும் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து நழுவினான்.

கொஞ்சம் நாட்களிலே அவனை கைது செய்தார்கள். அவன் மற்ற திருட்டுகளைப் பற்றியும் ஷிசிருவிடம் திருடியதைப் பற்றியும் கூறினான். ஷிசிரு சாட்சி கூறுவதற்காக அழைத்து வரப்பட்டார். அவர், "இந்த மனிதன் என்னை பொருத்த வரை திருடன் இல்லை. நான் கொடுத்த பணத்தை ஏற்றுக் கொண்டு எனக்கு நன்றி கூட கூறினான்" என்றார்.

திருடன் தன்னுடைய சிறைவாசத்தினை முடித்து விட்டு ஷிசிருவிடம் சீடனாக சேர்ந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக