செவ்வாய், 20 ஏப்ரல், 2010

நீ திருப்தியுடன் இல்லை.


ஒரு கட்டுப் பாடான ஸென் மடத்தில் பத்து வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு வார்த்தைகளே சீடர்கள் பேச அனுமதிக்கப் பட்டது.

பத்து வருடங்கள் முடித்த ஒரு சீடன், மடத்தின் குருவைப் பார்க்க சென்றான்.
குரு "ஆமாம்.. பத்து வருடங்களாகிவிட்டது!! என்ன சொல்ல நினைக்கிறாய்?" என்று சீடனைப் பார்த்து கேட்டார்.
சீடன்: "மெத்தை... கடினம்..." என்றான்.
குரு: "அப்படியா?" என்று முறுவலித்தார்.

அடுத்த பத்து வருடங்கள் உருண்டு ஒடின. சீடன் மடத்தின் குருவை பார்க்க சென்றான்.
குரு: "பத்து வருடங்கள் முடிவில் எந்த இரண்டு வார்த்தைகளை பேச நினைக்கிறாய்?"
சீடன்: "சாப்பாடு.. கெட்டது.."
குரு : "அப்படியா?" என்றார்.

மீண்டும் பத்து வருடங்கள் உருண்டு ஒடின. சீடன் மடத்தின் குருவை பார்க்க சென்றான்.
குரு: "ம்.. பத்து வருடங்கள் முடிவில் எந்த இரண்டு வார்த்தைகளை பேச போகிறாய்?"
சீடன்: "நான்.. போகிறேன்!" என்றான்.
குரு: "நல்லது!!", "ஏன் நீ போகிறாய் எனத் தெரியும்","எப்பொழுதுமே நீ திருப்தியுடன் இல்லை." என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக