செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இளைப்பாறி செல்லுமிடம்....


ஒரு அரண்மனைக்கு வந்த துறவியை எந்த காவலாளியும் தடுக்காததால் மன்னன் இருந்த சபைக்கு சென்றார். சபையில் இருந்த மன்னனைப் பார்த்து "இந்த தங்கும் விடுதியில் தூங்குவதற்கு ஒரு இடம் வேண்டும்" என்று கேட்டார்.
மன்னன் "இது தங்கும் விடுதி இல்லை - அரண்மனை, என்னுடைய இடம்" என்றார்.
துறவி மன்னனைப் பார்த்து "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?. - உனக்கு முன்னடி இந்த இடத்தில் யார் இருந்தது?" என்று கேட்டார்.
மன்னர் "எனது தந்தை!! இறந்துவிட்டார்" என்றார்.
"அதற்கு முன்பு?"
"எனது தாத்தா!! இறந்துவிட்டார்"
"அதற்கு முன்பு?"
"எனது பாட்டன்!! அவரும் இறந்துவிட்டார்"
துறவி "சிறிது காலம் இருந்து இளைப்பாறி செல்லும் இந்த இடத்தை தங்கும் விடுதி என்று கூறாமல் வேறு என்ன கூறுவது?" என்று கேட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக