செவ்வாய், 20 ஏப்ரல், 2010

தவிப்பதற்காகவே.

ஒரு ஸென் மடத்தின் இளைய துறவி, தனது மடத்தின் தலைமை குரு செய்த செயலைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான். தலைமை குரு செய்த செயலைப் பார்த்தும் அவரிடம் நேரடியாக எதுவும் கேட்க மனம் இல்லாமல் அங்கிருந்து மௌனமாக சென்றான். பின்பு பொருக்க முடியாமல், தன்னுடைய நண்பர்களிடம் குரு செய்த செயலைப் பற்றி கூறினான். "ஒரு ஸென் குரு இப்படி செய்யலாமா?", "எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது தானே புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கை?" என்று அனைவரும் குருவின் செயலை எண்ணி வெட்கம் அடைந்தனர்.

சில நாட்கள் கழித்து, ஒரு வழியாக அவர்களில் ஒருவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "குருவே!! நீங்கள் இந்த வழியில் மேய்ந்து கொண்டிருந்த மானை கல்லை கொண்டு அடித்தீர்களே!! அது சரியா?." என்று கேட்டான்.குரு மெதுவாக "ஆமாம்!! சில நாட்களாக வழி தவறி இங்கே வந்து மேய்ந்து கொண்டிருந்த மானைப் பார்த்தேன். அதுவே பழக்கமாகி இங்கே வந்து மேய்ந்து கொண்டிருந்தால், இந்த வழியாக செல்லும் வேடர்களின் கண்களில் பட்டு விடும், அதனை தவிப்பதற்காகவே சிறிய கற்களைக் கொண்டு மான்களை அடித்து விரட்டினேன்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக