செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மௌனத்தின் சத்தம்...

நான்கு புத்த மடத்து துறவிகள் இரண்டு வாரத்திற்கு எதுவும் பேசாமல் மௌனமாக தியானம் செய்வது என முடிவெடுத்தனர். அன்று இரவு படபடவென அடித்த காற்றில் ஏற்றி வைத்திருந்த மெழுகுவத்தி மினுமினுக்கென நிலையற்று எரிந்து முடிவில் அனைந்து விட்டது.
முதல் துறவி: "ஆ!! மெழுகுவத்தி அனைந்து விட்டது"
இரண்டாம் துறவி மெதுவாக: "பேசக் கூடாது என்று அல்லவா, நாம் முடிவெடுத்து இருந்தோம்?"
மூன்றாம் துறவி கோபமாக: "நீங்கள் இருவரும் ஏன் மௌனத்தை கலைத்து விட்டிர்கள்?"
நான்காம் துறவி சிரித்தவாறே: "ஹா ஹா! நான் ஒருவன் தான் பேச வில்லை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக