செவ்வாய், 20 ஏப்ரல், 2010

சுவையானது!

ஸென் குரு தாஜி (1889 - 1953 ) சாகும் தருவாயில் இருந்தார். அவருடைய சீடர்கள் அனைவரும் அவருடைய படுக்கை மெத்தையைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அதில் ஒரு சீடன் குருவின் மிகவும் விருப்பமான ஒரு குறிப்பிட்ட வகையான அரிதில் கிடைக்கும் கேக் ஒன்றினைத் தேடி, கடை கடையாக ஏறி இறங்கி அரை நாள் செலவழித்து டோக்கியோவில் இருந்து வாங்கி வந்தான்.

வெளிறிய கண்களுடன் இருந்த குரு, கேக்கினைப் பார்த்து புன்னகையை வரவழைத்துக் கொண்டு வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக நம்நம் என்று சத்ததுடன் சாப்பிட ஆரம்பித்தார்.

நிர்வாணம் (முக்தியை/சாவை) அடையும் தருவாயில் இருக்கும் ஸென் குருக்களிடம் அவர்களுடைய கடைசி வார்த்தை என்ன என்றுக் கேட்டு எழுதி வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம்.

கொஞ்ச நேரத்தில் களைப் படைந்து, கண்கள் சொருகும் நிலையில் இருந்த அவரிடம் சீடர்கள், "ஏதேனும் கடைசி அறிவுரை (அ) வார்த்தைகள் இருக்கிறதா?" எனக் கேட்டனர்.

"ஆமாம்" என்றார் குரு தாஜி. சீடன் மிகவும் முன்னே வந்து கவனமாக அவருடைய அருகில் குனிந்து ஒரு வார்த்தையைக் கூட தவற விடாமல் கேட்டு எழுதுவதற்கு ஆயத்தமானான்.

"சொல்லுங்கள், குருவே" என்றான் சீடன்.

"என்னுடைய..., ஆனால் இந்தக் கேக் மிகவும் சுவையானது!" என்று கூறியவாரே, மறைந்து போனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக