செவ்வாய், 20 ஏப்ரல், 2010

அதிர்ஷ்டம்.

ஒரு விவசாயின் பண்ணையில் இருந்த குதிரை ஒடிப் போய்விட்டது. அதனைக் கேட்ட பக்கத்தில் இருந்தவர்கள் அந்த விவசாயிடம் சென்று தனது வருத்தத்தினை தெரிவித்தனர். அதற்கு விவசாயி "இதனை நான் துரதிருஷ்டமாக கருதவில்லை" என்று பதிலுரைத்தார். அந்த ஊர் மக்கள் தலையை ஆட்டிக் கொண்டே அங்கிருந்து அகன்றனர்.

அடுத்த நாள் விவசாயின் குதிரை மற்ற மூன்று காட்டு குதிரைகளுடன் வீட்டிற்கு வந்தது. ஊர் மக்கள் அதனைக் கண்டு வியப்படைந்து விவசாயிடம் மகிழ்ச்சியுடன் உனக்கு அதிர்ஷ்டம் வந்து உள்ளது எனப் பாராட்டினர். அதற்கு விவசாயி மெதுவாக "இதனை அதிர்ஷ்டமாக கருதவில்லை" என்று அவர்களைப் பார்த்து கூறினார். இதனைக் கேட்ட மக்கள் முன்பைவிட குழப்பமாக அங்கிருந்து கிளம்பினர்.

அந்த வாரத்தின் கடைசியில் விவசாயின் மகன் புதுக் குதிரையை பழக்குவதற்காக சென்ற போது கால் உடைந்து வீட்டிற்கு வந்தான். ஊர் மக்கள் விவசாயியைப் பார்த்து தங்கள் வருத்தத்தினை தெரிவித்தனர். விவசாயி முன்பை போலவே "இதனை துயரமாக கருதவில்லை" என்று கூறினார். மக்கள் விவசாயிற்கு என்ன ஆயிற்று தனது மகன் கால் உடைந்ததை கூட துயரமாக கருதவில்லை என்று கூறியவாறு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அடுத்த நாள் நாட்டின் மன்னர் அந்த ஊரிலிருந்த வாலிபர்களை தனது இராணுவத்தில் சேர்ப்பதற்காக வந்தார். விவசாயின் மகன் கால் உடைந்து இருந்ததால் அவனை இராணுவத்தில் எடுத்துக் கொள்ள வில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக