செவ்வாய், 20 ஏப்ரல், 2010

நிலவை கொடுத்திருப்பேன்.

ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் இருந்த சிறிய குடிசையில் ஸென் துறவி ரியோகன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் குடிசையில் நுழைந்து ஏதெனும் கிடைக்குமா என்று தேடி ஒன்றும் கிடைக்காமல் ஏமாந்தான். அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த துறவி திருடனைப் பார்த்து "இவ்வளவு தூரம் என்னை பார்ப்பதற்காக வந்த நீ ஏமாந்து வெறுங்கையுடன் திரும்பக் கூடாது, என்னுடைய உடைகளை எடுத்துச் செல்!!." என்று கூறினார். வியப்பும், குழப்பமும் அடைந்த திருடன் உடைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விரைவாக நழுவினான். உடைகள் அற்ற துறவி நிர்வாணமாய் உட்கார்ந்து தொலைவில் தெரிந்த அழகிய நிலவினைப் பார்த்து இரசித்தார், பின்பு "முட்டாள் நான்!! இந்த அழகிய நிலவை திருடனிடம் கொடுத்து இருந்து இருக்கலாம்" என்று எண்ணினார்.M.JAIDEEP(9790113638)  Email id:Jai@precisionit.co.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக